இந்தியா
5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்த ஜனாதிபதி!
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பாரத ரத்னா விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 5 நபர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவித்தார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்மராவ், வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
LIVE: President Droupadi Murmu presents Bharat Ratna Awards at Rashtrapati Bhavan https://t.co/KDAJF6vvOK
— President of India (@rashtrapatibhvn) March 30, 2024