இந்தியா
மிசோரம் தேர்தல் முடிவுகள்: காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 7ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 80 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் வாக்கு எண்ணுக்கு நேற்று நடைபெற இருந்தது. ஆனால் மிசோரமில், ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறும் என்பதால் வாக்கு எண்ணிக்கையை வேறு தேதிக்கு மாற்ற பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதன் காரணமாக மிசோரமில் பதிவான வாக்குகள் டிசம்பர் 4ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி மிசோரமில் இன்று (திங்கட்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 13 மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எச்.லியான்செலா தெரிவித்தார்.