ஆன்மீகம்இந்தியா

ராமர் கோவில்: கடந்த 11 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பிரம்மாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. அதன்பின், நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோயிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில், கடந்த 11 நாட்களில் சுமார் 25 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்ததாக கோயில் அறக்கட்டளை அறிவித்துள்ளது. மேலும், அறக்கட்டளை இதுவரை பக்தர்களிடமிருந்து 11½ கோடி ரூபாய் காணிக்கை மற்றும் நன்கொடையாக பெற்றுள்ளது.

இதுகுறித்து அறக்கட்டளை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவிலில் வைக்கப்பட்டிருந்த காணிக்கை பெட்டிகளில் இருந்து ரொக்கமாக ரூ.8 கோடியும், காசோலை மூலம் மட்டும் ரூ.3 கோடி 50 லட்சமும் கிடைத்துள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− seven = 2

Back to top button
error: