ஆரோக்கியம்

வாரம் ஒரு முறை கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நற்பலன்கள்!!

நாம் சாதாரணமாக நினைக்கும் கருணைக் கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. இந்தச் சத்துக்கள் உடலின் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்ய வல்லது.

வாரம் ஒரு முறை கருணைக் கிழங்கை சாப்பிடுவதால் ஏற்படும் நற்பலன்கள்: –

  • வாரமொருமுறை கருணைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் அமில சுரப்பு சீராகும்.
  • வாரம் ஒரு முறை இதனை எடுத்துக் கொள்வதால் பசி இன்மை, மலச்சிக்கல், குடலில் புண்கள் போன்றவை நீங்குகிறது.
  • பெண்களின் உடல் சத்து இழப்பை சரி கட்டும் விதமாக இந்தக் கருணைக் கிழங்கு காணப்படுகிறது.
  • மூலம் நோய் ஏற்பட்டவர்களுக்கு கருணைக் கிழங்கு ஒரு சிறந்த வைத்திய உணவாகும்.
  • கருணைக் கிழங்கை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்வதால் உடலில் இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஆரம்ப நிலையிலேயே நீங்குகிறது அல்லது கட்டுப்படுகிறது.

இப்படி ஏராளமான நன்மைகளை தாராளமாகக் கொண்டது கருணைக் கிழங்கு. கருணைக் கிழங்கில் இரண்டு வகைகள் உண்டு. அவை. (1) காரும் கருணை (2) காராக் கருணை என்பவைகளாகும்.

காரும் கருணையைப் ‘பிடிகருணை’ என்றும், காராக் கருணையைச் ‘சேனைக்கிழங்கு’ என்றும் கூறுவர். இரண்டுமே சாப்பிடுவதற்கு உகந்தது தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− one = three

Back to top button
error: