ஆன்மீகம்
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில்: நாளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பு
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலான சுவாமி நாராயணன் கோவிலை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த 2015-ல் சென்ற பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்து மக்களுக்காக அபுதாபியில் கோவில் கட்ட வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று, பிரமாண்ட கோவில் கட்ட ஐக்கிய அரபு அமீரக அரசு அனுமதி அளித்து. அபுதாபியின் ஷேக் ஜாயித் சாலையில் 55 ஆயிரம் சதுரடி நிலமும் வழங்கியது.
இந்த நிலையில் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை அடுத்து கோயில் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இன்று அபுதாபி செல்லும் பிரமதர் மோடி, நாளை சுவாமி நாராயணன் கோயிலை பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கிறார்.