கடன் பிரச்சனைகளை தீர்த்து குபேர வாழ்வு தரும் குபேர விநாயகர்!!
விநாயகர் வழிபாடே சிறந்தது. அதிலும் கடன் பிரச்சனைகளை தீர்த்து குபேர வாழ்வு தரும் குபேர விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
குபேரனின் பரிபூரண அருளை பெற்றிருப்பதால் இவர் குபேர விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
வழிபடும் முறை :
விநாயகருக்கு புனுகு, ஜவ்வாது முதலிய நறுமணப் பொருட்களை பூசி உலர்ந்த பூக்களை மாலையாக சூட்டி வழிபடலாம்.
விநாயகரை அடிக்கடி கைகளால் தீண்டி வழிபடுவது மற்றும் நீரில் அபிஷேகம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
பலன்கள் :
வியாபாரம், தொழில் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
கடன் பிரச்சனைகள் நீங்க வழிவகை கிடைக்கும்.
வேலைவாய்ப்பில் இருந்துவந்த தடைகள் அகலும்.
பணவரவு பெருகி, செல்வங்களும் உண்டாகும்.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.
பிரதி மாதம் சங்கடஹர சதுர்த்தி அன்று இந்த குபேர விநாயகருக்கு பூஜை செய்வதால் வினைகள் நீங்கி சிறந்த கல்வி அறிவும் தெளிந்த ஞானமும் செல்வமும் பிள்ளைப்பேறும் துன்பங்கள் விலகும் எனபது ஐதீகம்.