சீனாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131-ஐ எட்டியது – 700க்கும் மேற்பட்டோர் காயம்!!
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.
வடமேற்கு சீனாவின் இமயமலை அடிவாரத்தில் திங்கள்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. கன்சு மாகாணத்தில் 113 பேர் உயிரிழந்ததாகவும், அண்டை மாநிலமான கிங்காய் மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆகவும் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளனர். இரண்டு மாகாணங்களிலும் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கன்சு மாகாணத்தில் 150,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அவர் கூறினார். மேலும், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சொத்து சேதம் 2.16 மில்லியன் டாலர்கள் என சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.