கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 10ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஒருசில இடங்களில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.