தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக, தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜன. 9) மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
அதனால், அந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜன. 9) விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதே போல, காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வருகிற ஜன. 14 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.