குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று தொடக்கம்!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 2.33 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (ஜனவரி 8) சென்னை ஆலந்தூரில் தொடங்கி வைக்கிறார்.
இந்த ஆண்டு பரிசுத் தொகுப்புடன் கூடுதலாக தலா 3,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஏற்கனவே டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் கோடிக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள சூழலில், விநியோக நடைமுறைகளைச் சீராகக் கண்காணிக்கவும் தகுதியுள்ள அனைவருக்கும் இந்தப் பரிசு சென்று சேருவதை உறுதி செய்யவும் மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துக்கள்