தமிழ்நாடுமாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!!

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 8ம் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக பங்குனி நாலாம் ஞாயிறு எட்டாம் நாள் திருவிழாவும், மறுநாள் திங்கட்கிழமை அன்று தேரோட்டம், பத்தாம் நாள் தீர்த்தவாரி பெருவிழா என்ற வகையில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு தேரோட்டம் ஏப்ரல் 8ம் தேதி அன்று திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த விடுமுறையை ஈடுகட்ட ஏப்ரல் 13ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேர்வுகள் அறிவிக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventy three − = seventy

Back to top button
error: