இந்தியா
ஸ்லீப்பர் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் விரைவில் அறிமுகம் – ரயில்வே அமைச்சர் தகவல்
ஸ்லீப்பர் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், 16 பெட்டிகள் கொண்ட இதுபோன்ற ரயில்கள் விரைவில் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றார். தற்போதுள்ள ரயில்களின் உயரம் குறைவாக இருப்பதால் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அதனால் வந்தே பாரத் ரயிலின் ஸ்லீப்பர் பெட்டிகள் அதிக உயரத்துடன் வடிவமைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.