இந்தியா
உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி காலமானார்!!
உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி காலமானார்.
அவருக்கு வயது 96. கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் வியாழக்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பாத்திமா பீவியின் மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஃபாத்திமா பிவி ஒரு தைரியமான பெண்மணி, அவரது பெயருக்கு பல பதிவுகள் உள்ளன. மன உறுதியும், தன்னம்பிக்கையும் இருந்தால், எத்தகைய துன்பத்தையும் சமாளிக்க முடியும் என்பதற்கு பாத்திமா பீவி ஒரு சான்று என்று கேரள அமைச்சர் வீனா ஜார்ஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.