இந்தியா
பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் 496 புள்ளிகள் உயர்ந்தது!!
கடந்த மூன்று நாள் நஷ்டத்திற்கு பிறகு இன்று பங்குச்சந்தை லாபத்தில் முடிந்தன.
கடந்த சில நாட்களாக நஷ்டத்தை சந்தித்து வந்த உள்நாட்டு பங்குச்சந்தைகள் இன்று லாபத்தில் மாறியது. இன்று காலை பெரும் ஏற்றத்துடன் துவங்கிய குறியீடுகள் இறுதி வரை அதே போக்கை தொடர்ந்தன. முதலீட்டாளர்கள் வாங்கும் பக்கம் திரும்பியதால் லாபத்தில் முடிந்தது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 496 புள்ளிகள் உயர்ந்து 71,683 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 160 புள்ளிகள் உயர்ந்து 21,622 புள்ளிகளில் நிலைத்தது.
BSE சென்செக்ஸ்
அதிக லாபம் ஈட்டியவர்கள்:
பாரதி ஏர்டெல் (-3.52%), NTPC (-3.04%), டெக் மஹிந்திரா (-2.56%), டாடா ஸ்டீல் (-2.43%) , மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (-2.38%).
அதிக நஷ்டம்:
Indus Ind Bank (-3.24%), HDFC வங்கி (-1.08%), கோடக் வங்கி (-0.66%), பாரத ஸ்டேட் வங்கி (-0.10% )