இந்தியா

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: விடுப்பு எடுத்த ஊழியர்கள் பணிநீக்கம்..!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியர்கள் பலர் திடீரென விடுப்பில் சென்றதையடுத்து அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விமான ஊழியர்கள் சமமாக நடத்தப்படவில்லை என்றும், வேலை விதிமுறைகளில் காணப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் ஊழியர்கள் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஊழியர்களின் திடீர் விடுப்பு காரணமாக பல விரைவு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட அந்நிறுவனம் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் 30 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஊழியர்களின் திடீர் விடுப்பு காரணமாக சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், 15,000 பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ fifty = fifty two

Back to top button
error: