இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து, திகார் சிறையில் அடைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை, கெஜ்ரிவால் தரப்பினர் தாக்கல் செய்து இருந்தனர். தற்போது அவரின் ஜாமீன் மனு தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடிவு செய்தது. இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1ம் தேதி வரை அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க மட்டுமே அனுமதிக்கப்படுவார் என்றும், முதல்வராக அதிகாரபூர்வ பணிகளில் பங்கேற்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ thirty nine = 47

Back to top button
error: