இந்தியா
திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார்!!
உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் அமலில் இருக்கும் என்றும், ஜூன் 2-ம் தேதி அவர் மீண்டும் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அன்று முதல் அவர் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.