இந்தியா

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 92 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் முடிவடைந்தன.

சர்வதேச சந்தைகளில் எதிர்மறையான சமிக்ஞைகள் காரணமாக நமது சந்தைகள் பிற்பகலில் சரிந்தன. இருப்பினும் முக்கிய நிறுவனங்களின் பங்குகள் இறுதியில் ஏற்றம் கண்டு லாபத்தில் முடிவடைந்தன.

இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 92 புள்ளிகள் உயர்ந்து 66,023 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 28 புள்ளிகள் உயர்ந்து 19,811 புள்ளிகளில் நிலைத்தது.

அதிக லாபமடைந்தவர்கள்:

NTPC (1.50%), இன்ஃபோசிஸ் (1.27%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் (1.24%), டைட்டன் (0.94%), டெக் மஹிந்திரா (0.87% ) ).

அதிக நஷ்டமடைந்தவர்கள்:

இண்டஸ் இண்டஸ் வங்கி (-2.10%), கோடக் வங்கி (-1.16%), மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (-1.07%), JSW ஸ்டீல் (-1.00%) ), மாருதி (-0.42%).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty two − = twelve

Back to top button
error: