இந்தியா

பங்குச்சந்தையில் இன்றும் பெரும் ஏற்றம்.. சென்செக்ஸ் 969 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில் 969 புள்ளிகள் உயர்வை சந்தித்தது. 71 ஆயிரத்து 483 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை மும்பை சென்செக்ஸ் தொட்டதுடன் தேசிய பங்குச்சந்தை நிஃப்டியும் 274 புள்ளிகள் உயர்ந்து 21 ஆயிரத்து 456 புள்ளிகளில் நிறைவடைந்தது.

நேற்றைய பங்குச்சந்தை ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உச்சம் சென்ற நிலையில் இன்றும் சென்செக்ஸ் நல்ல உயர்வை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தின் போது இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வையும், நெஸ்ட்லே இந்தியா, பாரதி ஏர்டெல், பங்குகள் சரிவில் இருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 − twenty six =

Back to top button
error: