கார் குண்டுவெடிப்பு.. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு!
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா நிவாரண நிதியை அறிவித்துள்ளார்.
இந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி அரசு ரூ. 10 லட்சம் நிவாரண நிதியை அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய முதலமைச்சர், நிரந்தர ஊனமுற்றோருக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்று கூறினார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு துணை நிற்கும் என்று அவர் உறுதியளித்தார். குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ரேகா குப்தா தனது இரங்கலைத் தெரிவித்தார்.
Posted in: இந்தியா