உத்தரகாண்ட்: சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. 10வது நாளாக மீட்கும் பணி தீவிரம்..!
உத்தரகாண்ட்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் விரைவுச்சாலை திட்டத்தின் கீழ் சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 12ம் தேதி காலை நிலச்சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையின் நடுவில் சிக்கிக்கொண்டனர்.
இவர்களை காப்பாற்ற 8 அரசு துறை வல்லுனர்கள் இரவு பகலாக முயற்சி செய்து வருகின்றனர். மீட்பு பணி 10வது நாளாக தொடர்கிறது.
இந்நிலையில், உத்தரகாண்ட் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளவர்களின் முதல் வீடியோ வெளியானது. சுரங்கப்பாதையில் 10 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களிடம் மீட்பு குழுவினர் வாக்கி டாக்கி மூலம் பேசும் முதல் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | First visuals of the trapped workers emerge as the rescue team tries to establish contact with them. The endoscopic flexi camera reached the trapped workers. pic.twitter.com/5VBzSicR6A
— ANI (@ANI) November 21, 2023