இந்தியா
பேடிஎம் பங்குகளின் விலை 2வது நாளாக 20 சதவீதம் சரிவு
பேடிஎம் பேமண்ட் வங்கி செயல்பாட்டை ரிசர்வ் வங்கி நிறுத்தப்போவதாக அறிவித்த நிலையில் பேடிஎம் பங்குகளின் விலை 2வது நாளாக தொடர்ந்து 20 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்ததால் பேடிஎம் வங்கி செயல்பாடுகளை பிப்ரவரி 29ஆம் தேதியுடன் நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பேடிஎம் நிறுவன பங்குகளின் விலை தொடர்ந்து 2 வது நாளாக 20 சதவீதத்துக்கும் மேலாக குறைந்துள்ளது. இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கியவுடன் ஒரே நாளில் பேடிஎம் நிறுவன பங்குகள் விலை 121 ரூபாய் 80 காசுகள் சரிந்து 487 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை ஆனது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.