இந்தியா

6-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளதால் வரும் 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்தவகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 6-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இதனையொட்டி நாளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுவது வழக்கம் என்பதால் அதற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இதில், கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பு கோரப்படும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

54 − = forty six

Back to top button
error: