இந்தியா

டெல்லியில் குறைந்த காற்று மாசுபாடு.. நாளை முதல் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்ததை அடுத்து, கட்டுப்பாடுகளை நீக்கி நாளை முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, வெள்ளிக்கிழமை வரை காற்றின் தரக் குறியீடு 400 ஆக பதிவாகி இருந்தது.

இதனிடையே, டெல்லியில் காற்றின் தரத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சனிக்கிழமை காற்றின் தரக் குறியீடு 340 ஆக பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + one =

Back to top button
error: