இந்தியாதமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை.. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!

ரம்ஜான் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அறிவித்தார்.

அந்த வகையில், தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

69 − = sixty three

Back to top button
error: