இந்தியா
வரும் 22ம் தேதி பங்குச்சந்தை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு
வரும் 22ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடக்க உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் அமைப்புகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் பொது விடுமுறை அறிவித்துள்ளன. இதை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.