உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர்.. வெளிவந்த வீடியோ இதோ!
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இடிந்து விழுந்த சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் வீடியோ காட்சி முதல் முறையாக வெளியாகியுள்ளன. இன்று காலை வெளியான இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எட்டு நாட்களுக்கு முன்பு 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டனர்.
அதிலிருந்து அவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று ஆறு அடி அகல குழாய் மூலம் கேமரா செலுத்தப்பட்டது. சிக்கிய தொழிலாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிய சுரங்கப்பாதைக்குள் கேமராவை அனுப்பிய அதிகாரிகள், அதன் மூலம் வீடியோ எடுத்தனர். தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்ததால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Rescue team officials establish audio-visual contact with the workers trapped in the tunnel for the first time, through the pipeline and endoscopic flexi camera.
(Video Source: District Information Officer) pic.twitter.com/JKtAtHQtN4
— ANI (@ANI) November 21, 2023