இந்தியா

நாளை அயோத்தி ராமாய பிராண பிரதிஷ்டை.. இந்த மாநிலங்களில் விடுமுறை அறிவிப்பு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளன.

இதன்படி, உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி, மத்திய பிரதேசம், கோவா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரியில் முழு விடுமுறையும், குஜராத், ராஜஸ்தான், திரிபுரா, சத்தீஸ்கர், அசாம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அரை நாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேசம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு நாளை திங்கள்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது. இதேபோல் நாளை பங்குச் சந்தைகளும் திறக்கப்படாது. அதற்குப் பதிலாக விடுமுறை நாளான சனிக்கிழமை பங்குச் சந்தைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

60 + = sixty three

Back to top button
error: