இந்தியா
பயங்கர மிக்ஜம் புயல் பாபட்லாவில் கரையை கடந்தது!!
வங்கக்கடலில் உருவான தீவிர புயல் பாபட்லாவில் முழுமையாக கரையை கடந்தது. இன்று மதியம் 12.30 மணியளவில் கரையை கடந்த மிக்ஜம் புயல், 2.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த பலத்த புயல் கரையை கடக்கும் போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக கூறப்படுகிறது. தற்போது, இது பாபாட்டிலிருந்து தென்மேற்கே 15 கிமீ தொலைவிலும், ஓங்கோலுக்கு வடகிழக்கே 40 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.