இந்தியா

ஆந்திரா: பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ லாரி மீது மோதியதில் 8 பேர் காயம்!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று புதன்கிழமை காலை குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ வேகமாக வந்த லாரி மீது மோதியதில் 8 குழந்தைகள் காயமடைந்தனர்.

லாரியும் ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

காயமடைந்த குழந்தைகள் பெத்தானி பள்ளி மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், காலை 7 மணியளவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த சில நொடிகளில் சம்பவ இடத்துக்கு வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், நசுங்கிய ஆட்டோவில் இருந்து குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மூத்த போலீஸ் அதிகாரி ஸ்ரீனிவாஸ் ராவ் கூறுகையில், 8 குழந்தைகளில் மூன்று குழந்தைகளில் பலத்த காயம் ஏற்பட்டது, ஒரு மாணவர் ஆபத்தான நிலையில் உள்ளார், சிகிச்சையில் உள்ளார், மீதமுள்ளவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixty two − = 53

Back to top button
error: