இந்தியா

இந்தியாவில் 63 பேர் புதிய வகை ஜே.என்.1 கொரோனாவால் பாதிப்பு – மத்திய அரசு

இந்தியாவில் 63 பேர் புதிய வகை ஜே.என்.1 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

கோவா மாநிலத்தில் மட்டும் 34 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் 9 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும், கேரளாவில் 6 பேருக்கும், தமிழ்நாட்டில் 4 பேருக்கும், தெலுங்கானா மாநிலத்தில் 2 பேருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று 628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 656 பேர் தொற்றுக்கு உள்ளாகினர். கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 54 ஆக அதிகரித்துள்ளது. கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty three − 17 =

Back to top button
error: