மத்தியப் பிரதேசத்தில் பேருந்து-லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலி..!
மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை இரவு ஒரு பயங்கர விபத்து நடந்தது. பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதியதில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து நடந்த உடனேயே தீ விபத்து ஏற்பட்டு பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. குணா-ஆரோன் சாலையில் இந்த விபத்து நடந்ததாகவும், காயமடைந்தவர்கள் குணா மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு 9 மணியளவில் ஆரோன் செல்லும் பேருந்தும் குணா நோக்கி வந்த டிப்பர் வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதியதாக எஸ்பி தெரிவித்தார்.
விபத்தின் போது பேருந்தில் 30 பயணிகள் இருந்ததாகவும், அவர்களில் 4 பேர் மட்டும் பெரிய காயமின்றி உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக குணா மாவட்ட ஆட்சியர் தருண் ரதி தெரிவித்தார்.