இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்தில் முடிவடைந்தன. சர்வதேச சந்தைகளின் சாதகமான சூழ்நிலையால் நமது சந்தைகளும் சாதகமாக வர்த்தகம் செய்தன.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 354 புள்ளிகள் உயர்ந்து 75,038 ஆக இருந்தது. நிஃப்டி 111 புள்ளிகள் அதிகரித்து 22,754 புள்ளிகளில் நிலைத்தது. எண்ணெய் மற்றும் எரிசக்தி குறியீடுகள் 1.74 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தன.
பிஎஸ்இ சென்செக்ஸ்
அதிக லாபம் ஈட்டியவர்கள்:
ஐடிசி (2.49%), கோடக் வங்கி (2.40%), பார்தி ஏர்டெல் (2.11%), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (1.94%), ஏசியன் பெயிண்ட்ஸ் (1.36%).
அதிக நஷ்டம் அடைந்தவர்கள்:
மாருதி (-1.60%), HDFC வங்கி (-0.83%), L&T (-0.78%), மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (-0.62%), டாடா ஸ்டீல் (-0.48%).