ஆன்மீகம்தமிழ்நாடுமாவட்டம்

சதுரகிரி கோவிலுக்கு நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல தடை..!

சதுரகிரி கோவிலுக்கு நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நாளை மார்கழி பிரதோஷமும் வரும் 26-ம் தேதி பவுர்ணமியும் வருகிறது. ஆனால், கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்கள் யாரும் தானிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

69 − = sixty

Back to top button
error: