விளம்பரம்

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 330 சிறப்பு அதிகாரி பதவிகள்!

பாங்க் ஆஃப் பரோடா வங்கி 330 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:

சிறப்பு அதிகாரி – 330 பதவிகள்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது 21 முதல் 45 வரை இருக்க வேண்டும். அந்தந்தப் பதவிகளை பொறுத்து வயது வரம்பு மாறுபடும். அரசு விதிகளின்படி, SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் மற்றும் PwD விண்ணப்பதாரர்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.

சம்பள விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பதவியைப் பொறுத்து மாதம் ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். தங்குமிடம், மருத்துவம் மற்றும் பயணம் தொடர்பான பிற கொடுப்பனவுகளும் அவர்களுக்கு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/இடபிள்யூஎஸ்/ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ. 850, எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள் ரூ. 175 செலுத்த வேண்டும்.

தேர்வு செயல்முறை:

தேர்வு இரண்டு நிலைகளில் செய்யப்படும். முதலாவது குறுகிய பட்டியல் மற்றும் இரண்டாவது தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பாங்க் ஆஃப் பரோடாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.bankofbaroda.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான பதிவு செயல்முறை ஆகஸ்ட் 19 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

பகிர்வு:

0 கருத்துக்கள்

கருத்து தெரிவிக்க


அறிவிப்புகள் 0
விளம்பரம்
விளம்பரம்
error: