ஆந்த்ரோபிக் AI சந்தா திட்டங்களில் அதிரடி மாற்றம்: இந்தியப் பயனர்களுக்கு ரூபாயில் கட்டணம் அறிமுகம்!
முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) தனது சந்தா திட்டங்களில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளதோடு, உலகிலேயே இரண்டாவது பெரிய சந்தையாகத் திகழும் இந்தியப் பயனர்களுக்காக முதன்முறையாக ரூபாயில் கட்டண முறையை (மாதம் ரூ.2,399) அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபேபிள் 5 போன்ற அதிநவீன ஏஐ மாடல்களைப் பராமரிப்பதற்கான அதிக செலவு மற்றும் உள்கட்டமைப்புத் தேவையைச் சமாளிக்கும் பொருட்டு, ‘கிளவுட் ப்ரோ’ மற்றும் ‘டீம் ஸ்டாண்டர்ட்’ பயனர்கள் இனி இந்த மாடலை நேரடியாக அணுக முடியாது என்றும், உயர் பிரிவு பயனர்களுக்கான பயன்பாட்டு வரம்பு 50 சதவீதம் குறைக்கப்படுவதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த திடீர் மாற்றங்களால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு நிவாரணமாக ஒரு முறை வழங்கப்படும் $100 மதிப்பிலான கிரெடிட்டை ஆந்த்ரோபிக் நிறுவனம் வழங்கியுள்ளதோடு, எதிர்காலத்தில் உள்கட்டமைப்புத் திறன் மேம்பட்டவுடன் ஃபேபிள் 5 மாடலுக்கான முழு அணுகல் மீண்டும் வழக்கமான சந்தாக்களில் சேர்க்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
How do you react to this story?
கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.
0 Comments