ஆன்மீகம்

திருமண பாக்கியம் கொடுக்கும் மந்திரம்

திருமணம் தள்ளிப் போவதற்கு காரணமாக இருக்கும் எல்லா தடைகளையும் நீக்கி விரைவில் திருமண பாக்கியத்தை கொடுக்கும் சக்தி கீழ்க்கண்ட மந்திரத்திற்கு உண்டு. வெள்ளிக்கிழமை தோறும் கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபித்தால் கூடிய விரைவில் திருமண பாக்கியம் உண்டாகும்.

“காத்யாயனீ மஹாதேவி மஹாமாயே மஹேஸ்வரி நந்தேகாப ஸீதம் தேவி பதிம் மே

தாதுமர் ஹனிஸர்வ மங்கள மாங்கல்யேஸிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே

த்ரயம்பகே கவுரி நாராயாணி நாமோஸ்துதே”

மேற்கண்ட மந்திரத்தை தாமரை பூத்தண்டுதிரியில் ஐந்து முகம் கொண்ட விளக்கில் நெய் தீபம் ஏற்றி விடியற்காலை 5.30 மணிக்கு கிழக்கு நோக்கி பார்த்து அல்லது விளக்கை பார்த்து 54 தடவை சொல்ல வேண்டும்.

இவ்வாறு மந்திரம் ஜெபிக்கும் போது சம்பத்தப்பட்ட ஜாதக குறிப்பை மஞ்சள் தடவி அம்பாள் படத்தின் முன்னே வைத்து விடவேண்டும்.

இவ்வாறு பூஜிக்கப்பட்ட ஜாதகத்தை திருமண பேச்சு வார்த்தை நடக்கும் சமயங்களில் கொண்டு சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: