விளம்பரம்

மத்திய கிழக்கில் உச்சக்கட்டப் பதற்றம்: வான்வெளியை அதிரடியாக மூடியது ஈரான் – சர்வதேச விமானங்கள் ரத்து!

உள்நாட்டுக் கலவரம் மற்றும் அமெரிக்காவுடனான போர் பதற்றம் காரணமாக, ஈரான் தனது வான்வெளியை முழுமையாக மூடியுள்ளது.

ஈரானில் வெடித்துள்ள உள்நாட்டுக் கலவரம், இணையச் சேவை முடக்கம் மற்றும் அமெரிக்காவுடனான போர் பதற்றம் போன்ற காரணங்களால், நாட்டின் வான்வெளியை அனைத்து வகையான விமானப் போக்குவரத்துகளுக்கும் மூடுவதாக ஈரானிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (NOTAM) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் தடையால் சிவில், ராணுவம் மற்றும் சரக்கு விமானங்கள் என அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா, எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட முன்னணி சர்வதேச நிறுவனங்கள் ஈரானிய வான்வெளியைத் தவிர்த்துத் தங்களது விமான வழித்தடங்களை அவசரமாக மாற்றியமைத்து வருகின்றன.

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவால், தெஹ்ரான் வான்வழிப் பிராந்தியம் தற்போது விமானங்களே இல்லாத வெறிச்சோடிய மண்டலமாக மாறியுள்ளதோடு, சர்வதேச வான்வழிப் போக்குவரத்தில் இது பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

பகிர்வு:

0 கருத்துக்கள்

கருத்து தெரிவிக்க

Are you human? Please solve:Captcha


அறிவிப்புகள் 0
விளம்பரம்
விளம்பரம்
error: