உலகின் மிகவும் பரபரப்பான ஹீத்ரோ விமான நிலையம் மூடல்!!
உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம், விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூடப்பட்டுள்ளது.
இதனால் ஏர் இந்தியா உட்பட பல சர்வதேச விமானங்களின் இயக்கத்தில் இடையூறு ஏற்பட்டது. ஹீத்ரோ அருகே உள்ள ஒரு மின் துணை நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மின்சாரம் எப்போது திரும்பும் என்பது தெரியாததால், ஹீத்ரோ விமான நிலையம் மார்ச் 31, 2025 அன்று நள்ளிரவு வரை மூடப்பட்டிருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Posted in: உலகம்