தமிழ்நாடுமாவட்டம்

புத்தாண்டு: சென்னையில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார்!!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நாளை இரவு 9 மணி முதல் முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராய நகர், பரங்கிமலை, அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட 420 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இருசக்கர வாகனங்களில் 25 சாலை பாதுகாப்பு படையினர் ரோந்து செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 13 =

Back to top button
error: