இந்தியா
டிச.4ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை மறுதினம் தொடங்குகிறது. 19 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தொடரில் 15 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டள்ளது. எனவே, இக்கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி நாடாளுமன்றத்தின் நூலக கட்டடத்தில் நடக்க உள்ள இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் நாடாளுமன்றக் குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.