இந்தியா
பங்குச்சந்தை: சென்செக்ஸ் 930 புள்ளிகள் ஏற்றம்!!
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (டிசம்பர் 14) பெரும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
அமெரிக்க மத்திய வங்கி முக்கிய வட்டி விகிதங்களை சீராக வைத்திருப்பதால் முதலீட்டாளர்களின் உணர்வு வலுப்பெற்றது. அதனால், வாங்க முனைகின்றனர்.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 930 புள்ளிகள் உயர்ந்து 70,514 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 256 புள்ளிகள் உயர்ந்து 21,183 ஆக இருந்தது.
BSE சென்செக்ஸ்:
அதிக லாபம் அடைந்தவர்கள்:
டெக் மஹிந்திரா (3.91%), இன்ஃபோசிஸ் (3.61%), விப்ரோ (3.52%), HCL டெக்னாலஜிஸ் (3.32%), இண்டஸ் இண்ட் வங்கி (2.97) %).
அதிக நஷ்டம் அடைந்தவர்கள்:
பவர் கிர்ட் கார்ப்பரேசன் (-2.01%), நெஸ்லே இந்தியா (-1.04%), டைட்டன் (-0.32%), JSW ஸ்டீல் (-0.29%), மாருதி (-0.29%).