இந்தியாதமிழ்நாடு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று முதல் இரு நாட்கள் மத்தியக் குழு ஆய்வு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட குழு அனுப்பி வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதன்படி குணால் சத்யார்த்தி, திமான் சிங் மற்றும் டாக்டர்.ஏ.கே.சிவ்ஹரே ஆகியோர் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். எஞ்சிய 3 உறுப்பினர்களான விஜயகுமார், பவ்யா பாண்டே மற்றும் ரங்கநாத் ஆடம் ஆகியோர் இன்று காலை சென்னை வருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ two = eleven

Back to top button
error: