சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட குழு அனுப்பி வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி குணால் சத்யார்த்தி, திமான் சிங் மற்றும் டாக்டர்.ஏ.கே.சிவ்ஹரே ஆகியோர் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். எஞ்சிய 3 உறுப்பினர்களான விஜயகுமார், பவ்யா பாண்டே மற்றும் ரங்கநாத் ஆடம் ஆகியோர் இன்று காலை சென்னை வருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.