பங்களாதேஷில் 5.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!!
பங்களாதேஷின் சிட்டகாங்கில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சிட்டகாங்கின் ராம்கஞ்ச் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 9.41 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) படி, அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. பூமியின் உட்பகுதியில் 55 கிலோமீட்டர் ஆழத்தில் அசைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ராம்கஞ்ச் அருகே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களில் சிட்டகாங் மாகாணத்தில் உள்ள லட்சுமிபூர், சந்த்பூர், கொமிலா ஆகிய இடங்களில் நிலம் குலுங்கியது.
இதேபோல், ராஜ்ஷாஹி, சில்ஹெட், டாக்கா, நோவகாலி மற்றும் குஷ்டியா ஆகிய இடங்களிலும் நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
Earthquake of Magnitude:5.6, Occurred on 02-12-2023, 09:05:31 IST, Lat: 23.15 & Long: 90.89, Depth: 55 Km ,Location: Bangladesh, India for more information Download the BhooKamp App https://t.co/Sv8aV8laX2@Indiametdept @Dr_Mishra1966 @KirenRijiju @ndmaindia @Ravi_MoES pic.twitter.com/GuwGe69u3x
— National Center for Seismology (@NCS_Earthquake) December 2, 2023