இந்தியா

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியீடு!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில், தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 1950 என்ற எண்ணில் கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் தொடர்பான விவரங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifty two + = fifty three

Back to top button
error: