இந்தியா

பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்

48 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் செல்கிறார்.

48 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளாா். மேலும் ‘அமுல்’ பிராண்டின் உரிமையாளரான குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் பொன்விழா ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

அதனைத் தொடர்ந்து நாளை உத்தரபிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாராணசி செல்லும் பிரதமர் மோடி அங்கு 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− three = two

Back to top button
error: