இந்தியா
கர்நாடக ராஜ்பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாரிகள் எச்சரிக்கை..!
கர்நாடக ராஜ்பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல்துறைக்கு போன் செய்து ராஜ்பவன் மீது வெடிகுண்டுகளை வீசுவோம் என்று எச்சரித்துள்ளார். உடனடியாக போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இதனால் ராஜ்பவனில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டை கண்டுபிடிக்க களத்தில் இறங்கினர். ராஜ்பவன் சுற்றுவட்டார பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் கே-9 பிரிவுகள் தீவிர சோதனையில் ஈடுபட்டன. ஆனால், சந்தேகப்படும்படியான பொருள் எதுவும் கிடைக்கவில்லை. மறுபுறம், தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் அந்த நபரை பிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர்.