இந்தியா
மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்றார்!
மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதையடுத்து, பா.ஜ., இன்று அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தின் துணை முதல்வராக ஜெகதீஷ் தியோரா மற்றும் ராஜேந்திர சுக்லா ஆகியோர் பதவியேற்றுள்ளனர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.
2023 சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கானாவைத் தவிர, நான்கு மாநிலங்களின் தேர்தல்களில், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ராஜஸ்தான் முதல்வராக பஜன் லால் சர்மா டிசம்பர் 15 ஆம் தேதி பதவியேற்கிறார்.