இந்தியா
ஆதித்யா-எல் 1 விண்கலம் இன்று இறுதி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ தகவல்!
ஆதித்யா-எல் 1 விண்கலம் இன்று இறுதி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல் 1 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்னும் தனது இலக்கை ஏற்கனவே அடைந்து விட்டது.
இந்த நிலையில், இன்று தனது இறுதி சுற்றுப்பாதையில் திட்டமிட்டப்பட்டபடி, நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. எல்1 புள்ளியில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த முயற்சிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.