இந்தியா
புதுச்சேரியில் நாளை மறுநாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!
புயல் எச்சரிக்கை காரணமாக வரும் 4 ஆம் தேதி திங்கள்கிழமை புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கல்வித்துறை அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் புயலாக வலுப்பெற்று, 5-ந்தேதி ஆந்திராவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக வரும் 4 ஆம் தேதி திங்கள்கிழமை புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதியைச் சேர்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.